இறைவனின் அன்னையாவதற்கு மரியா அளித்த அந்த ஒப்புதலை ஒவ்வொரு நாளும் நடுப்பகலில் நினைவு
கூருகிறது கிறிஸ்தவ பாரம்பரியம். தாராள மனதோடு மரியா அளித்த இந்த "ஆம்" எனும் ஒப்புதல்,
உலகின் நம்பிக்கையை மனித உரு கொள்ளச் செய்தது. முப்பது ஆண்டுகள் கழித்து சிலுவையடியில்
மரியன்னை கண்ணீரோடு நின்றபோது, அவர் நம்பிக்கை குலைந்திருக்க வேண்டும். இருளின் சக்திகள்
அதிகம் வென்றுவிட்டதைப் போல் தோன்றியிருக்க வேண்டும். இருந்தாலும், அன்று வானதூதர் சொன்ன
மொழிகளை மரியா ஆழமாகப் பற்றிக் கொண்டிருந்ததால், உயிர்ப்பு ஞாயிறின் மகிமையில் மகிழ்வோடு
அவரால் பங்கேற்க முடிந்தது.உலகை அன்பாலும், ஒற்றுமையாலும் இறைவன் நிரப்ப வேண்டுமென இங்கு
கூடியுள்ள நம் அனைவருக்காகவும், சைப்ரஸ் நாட்டு மக்கள் அனைவருக்காகவும், மத்திய கிழக்குப்
பகுதி திருச்சபைக்காகவும் அன்னை மரியாவின் பரிந்துரையோடு இணைந்து வேண்டுவோம்.