வாழ்வைக் கண்டு அஞ்ச வேண்டாம். வாழ்வதற்குத் தகுதி இருக்கிறது என்று நம்புங்கள். என்று
சொன்னவர் வில்லியம் ஜேம்ஸ். உங்கள் வாழ்க்கையின் வெற்றியைத் தடுக்கும் எல்லாச் செயல்களையும்
பட்டியல் இடுங்கள். மற்றவர்களிடம் சண்டை போடுகிறீர்களா? அதிகமாகக் கவலைப்படுகிறீர்களா?
வாழ்வின் அளவில்லாத விடயங்களைப் பாராமல் சிரமங்களை மட்டுமே காண்கிறீர்களா? சிந்தியுங்கள்.
உங்களைக் கட்டிப்போடும் செயல்களைச் சிறிது காலத்திலேயே சரியான யுக்திகள் மூலம் மாற்ற
முடியுமா? முடியும். இதற்குச் சக்தி வாய்ந்த மருந்து நல்லுணர்வுதான். இதனால் எதிர்நிலைப்
பார்வையை நீக்கி நேர்நிலைச் சிந்தனையை வளர்க்க முடியும் என்று உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.