2010-06-04 16:16:43

மக்கள் சேவையில் ஈடுப்பட்டிருந்தவர்களைக் காவல் துறை கைது செய்திருப்பதற்கு குஜராத் தலத் திருச்சபை கண்டனம்


ஜூன்04,2010 குஜராத்தில் மக்கள் சேவையில் ஈடுப்பட்டிருந்த இருவரைக் காவல் துறை கைது செய்திருப்பதற்கு அங்குள்ள தலத் திருச்சபை தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
கடந்த திங்களன்று இரு வேறு அரசு சாரா அமைப்புக்களில் பணி புரிந்து வரும் Srinivas Sattaya Kurapati, அவரது மனைவி Hansa இருவரையும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் காவல் துறை கைது செய்தது.
எந்த வித ஆதாரமும் இன்றி இவ்விருவரும் கைது செய்யப்பட்டிருப்பது அரசின் அராஜக போக்கை மேலும் உறுதிப்படுத்துகிறதென அகமதாபாத்தில் மனித உரிமைகள் மையத்தை நடத்தி வரும் இயேசு சபைக் குரு Cedric Prakash கூறினார்.
Maoist மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சமுக சேவை செய்யும் 12 பேரை இதுவரை அரசு கைது செய்திருக்கின்றதென அருட்தந்தை Prakash கூறினார்.பழங்குடியினருக்கு எதிராக அரசு மேற்கொண்ட வன்முறைச் செயல்களைச் சுட்டிக் காட்டி கேள்விகள் கேட்டதால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சமூகப் பணி மையத்தின் இயக்குனர் அருட்தந்தை Xavier Manjooran கூறினார்.







All the contents on this site are copyrighted ©.