நாம் எல்லாருமே இதைத் தேடுகிறோம். நம்மில் சிலர் இதை வாழ்க்கை முழுவதும் தேடுகின்றனர். ஒரு
சிலர் இதை விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்று எண்ணுகின்றனர். ஒரு சிலர் இதை அணியும்
உடை போல் கருதுகின்றனர். தேவைப்படும் போது மாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றனர். ஒரு
சிலர் இதைத் தேடி, மலை முகடுகள், அடர்ந்த காடுகள், கடற்கரைகள், பாலை நிலங்கள் என்று உலகின்
பல இடங்களுக்குச் செல்கின்றனர். பலருக்குத் தாங்கள் எதைத் தேடுகிறோம் என்று தெரியாமலேயேத்
தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், எல்லாரையும் எங்க வைப்பது இது. இது இல்லையெனில்
வாழ்வில் நிறைவிருக்காது. இது இல்லையெனில் வார்த்தைகளில் விவரிக்க முடியாது ஒரு வெற்றிடம்
மனதில் உருவாகும். இந்த வெற்றிடத்தை வேறு எதனாலும் நிரப்ப முடியாது. நாம் அனைவரும்
தேடும் இது என்ன தெரியுமா? அதுதான் உண்மை.