2010-06-04 16:16:20

குருக்கள் ஆண்டின் நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கு


ஜூன்04,2010 குருக்கள் ஆண்டின் நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்திய ஆயர் பேரவையின் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஜூன் மாத இறுதியில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்து வருகிறது.
தலித், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மத்தியில் பணி புரியும் குருக்களுக்காக நடத்தப்படும் இந்த கருத்தரங்கு சென்னையில் ஜூன் மாதம் 28, 29 தேதிகளில் நடைபெறும் என்று இந்திய ஆயர் பேரவையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.தலித் மக்களை வலிமை வாய்ந்தவர்களாய் மாற்றுவதும், யாரையும் புறந்தள்ளாமல் அனைவரையும் ஒன்றிணைத்து சமுதாயங்களைக் கட்டி எழுப்புவதும் இந்தக் கருத்தரங்கின் மையப்பொருளாக இருக்கும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.