2010-06-03 14:59:12

காசாப் பகுதியில் இஸ்ரேல் படையால் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்தோனேசியாவில் அனைத்து மதத் தலைவர்களின் வன்மையான கண்டனம்


ஜூன்03,2010 இதற்கிடையே, காசாப் பகுதியில் இஸ்ரேல் படையால் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறித்து இந்தோனேசியாவில் உள்ள அனைத்து மதத் தலைவர்களும் தங்கள் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் மனித மதிப்பீடுகளுக்கும், அகில உலக நன்னெறி, சட்டம் ஒழுங்கு அனைத்திற்கும் எதிரான ஒரு செயல் என்று இந்தோனேசிய ஆயர் பேரவையின் மத நல்லிணக்கக் குழுவின் செயலர் அருட்தந்தை Antonius Benny Susetyo கூறினார்.மனித குலத்திற்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற செயல்களின் போது, மதங்களுக்கிடையேயான வேற்றுமைகளை மறந்து, அனைவரும் கண்டனம் தெரிவிப்பது அவசியம் என்று பல்வேறு மதத் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.







All the contents on this site are copyrighted ©.