2010-06-03 14:58:59

இஸ்ரேல் மீது சர்வதேச கண்டனம்


ஜூன்03,2010 காசாவை நோக்கிச் சென்ற உதவி நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று ஐநாவின் பாதுகாப்புக் குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான சர்வதேச கண்டனம் எழுந்துள்ள அதேவேளை, காசா மீதான தடைகளை இஸ்ரேல் நீக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
கப்பலில் இருந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் தம்மை தாக்க முற்பட்ட போது இஸ்ரேலிய படையினர் தற்காப்புக்காகவே தாக்கியதாக இஸ்ரேல் அரசு கூறியுள்ளது.இந்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.