2010-06-03 14:57:23

அமெரிக்காவில் நடைபெறும் கத்தோலிக்க தொடர்புசாதன கருத்தரங்கிற்கு தொலைத் தொடர்பு வாழ்த்துக்களை அனுப்பினார் திருத்தந்தை


ஜூன்03,2010 புதிய தொடர்பு சாதனங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை இன்னும் அதிகமான மக்களுக்கு எடுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தவை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இப்புதனன்று புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்ற பொது மறைபோதகத்தின் போது அமெரிக்காவில் New Orleans நகரில் நடைபெறும் கத்தோலிக்க தொடர்புசாதன கருத்தரங்கிற்கு தொலைத் தொடர்பு வாழ்த்துக்களை அனுப்பிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.‘கணணி வழி நற்செய்தியை அறிவித்தல்’ என்ற மையக் கருத்துடன் இவ்வெள்ளி வரை நடைபெறும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைவரும் 'நான் உங்களோடு எந்நாளும் இருக்கிறேன்' என்று கூறிய கிறிஸ்துவின் உறுதி மொழியை முழுமையாக உணர வேண்டும் என்ற தன் வாழ்த்துக்களைக் கூறினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.