2010-06-02 16:35:59

ஜூன் 03 – நாளும் ஒரு நல்லெண்ணம்


உண்மை என்பது மிகப்பெரும் ஆயுதம்.

கூறுபவரையும், கூறப்படுபவரையும் காயப்படுத்தலாம்.

அன்பு என்பதும் ஆயுதம் தான்.

கூர்பவரையும், கூரப்படுபவரையும் சமப்படுத்தலாம்.

இந்த இரு ஆயுதங்களும் இணைந்தால் அதற்கு இணையேது?

உண்மை அன்பை ஈட்டுபவருக்கு ஈடேதும் உண்டோ?

உண்மையால் சாதிக்க முடியாததைக் கூட அன்பால் சாதிக்கலாம்.

அன்பு கூட அயர்வடையலாம், உண்மையோ உறங்குவதேயில்லை.

உண்மை ஒருவருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அன்போ பலரிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால், இவ்விரண்டும்தான் சமூகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.

 








All the contents on this site are copyrighted ©.