2010-06-02 15:59:42

ஆந்திர மாநிலத்தைத் தாக்கிய லைலா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு Christian Aid 35 லட்சம் ரூபாய் உதவித் தொகை


ஜூன்02, 2010 மே மாதம் 20ஆம் தேதி ஆந்திர மாநிலத்தைத் தாக்கிய லைலா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு Christian Aid எனும் உதவி அமைப்பு 35 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கியுள்ளது.
இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் உணவு, குடிநீர் போன்று பல வகைகளிலும் உதவிகள் தேவைப்படுகின்றன என்று இவ்வமைப்பில் பணிபுரிபவர்கள் கூறுகின்றனர்.
நெருக்கடி நேரங்களில் துயர் துடைக்கும் பணியில் அனுபவம் பெற்ற இந்த அமைப்பினர் இதுவரை 2,000 க்கும் அதிகமான மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர் என்பதும், இனி வரும் வாரங்களில் 10,000 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு உதவ முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.2004ஆம் ஆண்டு இந்திய கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சுனாமிக்குப் பின் ஆந்திராவில் Christian Aid உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளில் லைலா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்தனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.