அமெரிக்காவில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு கத்தோலிக்க உதவி.
மே 31, 2010. மெக்ஸிகோ வளைகுடாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள
மீனவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை வழங்கி வருகின்றன கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகள்.
மெக்ஸிகோ
வளைகுடாவில் ஏப்ரல் மாதம் 20ந்தேதி இடம்பெற்ற ஆழ்கிணறு எண்ணெய் ஆய்வு மைய விபத்தினால்
கடல் நீர் பெருமளவில் அசுத்தமாகியுள்ளதைத் தொடர்ந்து மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருக்கும்
மக்களுக்கு உதவி வருகின்றன கத்தோலிக்க உதவி அமைப்புகள். பாதிக்கப்பட்டுள்ள மக்களுள் ஏறத்தாழ
4645 பேர் இதுவரையில் ஏதாவது ஒருவகையில் இக்கத்தோலிக்க பிறரன்பு நிறுவனங்களிடமிருந்து
உதவிகளைப் பெற்றுள்ளன.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் லூயிசியானா, அலபாமா மற்றும் மிஸிஸிப்பி
மாநிலங்களில் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் 250 கோடி டாலர் இழப்பு ஏற்படலாம்
எனக் கணிக்கப்பட்டுள்ளது.