2010-05-28 15:20:16

இந்திய ஆயர் பேரவையின் தொழில் ஆணையம், இந்திய தொழிலாளரின் கூட்டமைப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது


மே28,2010 அமைப்புமுறைசாராத் தொழிலாளரின் நலன் கருதி இந்திய ஆயர் பேரவையின் தொழில் ஆணையம், WIF என்ற இந்திய தொழிலாளர் கூட்டமைப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.

பெங்களூரில் இவ்வாரத்தில் நிறைவடைந்த மூன்று நாள் கருத்தரங்கில் இதைத் தொடங்கி வைத்து உரையாற்றிய இந்திய ஆயர் பேரவையின் தொழில் ஆணையத் தலைவர் ஆயர் ஆஸ்வால்டு லூயிஸ், இந்தியாவிலுள்ள 46 கோடித் தொழிலாளரில் 93 விழுக்காட்டினர் அமைப்புமுறைகளைச் சாராதவர்கள் என்றார்.

சட்டரீதியான மற்றும் சமூகப் பாதுகாப்பில்லாமல் இருக்கும் இவர்களின் நலன் கருதி இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக் கூறினார் ஆயர் லூயிஸ்.

இந்த WIF நிறுவனத்தின் தலைவராகத் தமிழகத்தின் திருவாளர் ராஜாமணியும் பொதுச் செயலராக கேரளாவின் திருவாளர் ஜோசப் ஜூடும், பொருளாளராக மகாராஷ்டிராவின் ஆல்வின் தேவாசும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிறுவனம் 120க்கு மேற்பட்ட மாவட்டங்களில் 8 மாநில மற்றும் 5 தேசிய இயக்கங்களை உள்ளடக்கியதாகும்.








All the contents on this site are copyrighted ©.