2010-05-27 16:21:36

போலந்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தையின் உதவி.


மே 27, 2010 போலந்து நாட்டில் அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அந்நாட்டுத் திருச்சபைக்கு சிறப்பு நிதியுதவி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாகவும், தாராள மனதுடன் உதவும் நிறுவனங்கள் மேலும் உதவ ஊக்கமளிப்பதாகவும் திருத்தந்தையின் இந்நடவடிக்கை உள்ளது என்றது திருப்பீடத்தின் “கோர் ஊனும்” அவை.

திருப்பீடத்தின் உதவி அமைப்பான “கோர் ஊனும்” மூலம் இந்நிதி உதவியை போலந்து ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் யோசேஃப் மிக்காலிக்குக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை.

போலந்தின் அண்மை பெருமழையால் 15 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.