2010-05-27 16:21:57

திருத்தந்தைக்கான ஆதரவை வெளியிடும் சலேசிய சபை ஆயர்களின் கடிதம்.


மே 27, 2010 திருத்தந்தை 16ம் பெனடிக்டிற்கான தங்கள் ஆதரவின் உறுதிப்பாட்டை வெளியிடும் கடிதம் ஒன்றை திருப்பீடத்திற்கு அனுப்பியுள்ளனர் சலேசிய சபை ஆயர்கள்.

சலேசிய சபையின் 150வது ஆண்டு, புனித தொன் போஸ்கோவைத் தொடர்ந்து அச்சபையை வழிநடத்திய முத்திப்பெற்ற மைக்கல் ருவா இறந்ததன் நூறாமாண்டு, முதல் சலேசிய ஆயரின் ஆயர் திருநிலைப்பாட்டின் 125ம் ஆண்டு ஆகியக் கொண்டாட்டங்களையொட்டி இத்தாலியின் தூரின் அருகேக் கூடிய ஏறத்தாழ 90 சலேசிய ஆயர்கள் இணைந்து இக்கடித்தத்தை திருத்தந்தைக்கு அனுப்பியுள்ளனர்.

திருத்தந்தையுடனும் திருச்சபையுடனும் நெருக்கத்தையும் அன்புறவையும் வெளிப்படுத்தும் இக்கடிதத்தில் சலேசிய ஆயர் என்ற வகையில் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயும் கையெழுத்திட்டுள்ளார்.

இன்றையச் சூழல்களின் அக்கறைகளை திருத்தந்தையுடன் பகிர்ந்து கொள்வதாகவும், ஏழைகள், கைவிடப்பட்டோர் மற்றும் கிறிஸ்துவைப்பற்றி அறியாதோர்க்கு நற்செய்தியை அறிவிக்கத் தகுதி பெறும் பொருட்டு தங்கள் வாழ்வையும் திருச்சபையையும் புனிதப்படுத்துமாறு இறைவனை வேண்டுவதாகவும் அக்கடிதத்தில் கூறியுள்ளனர் சலேசிய ஆயர்கள்.








All the contents on this site are copyrighted ©.