2010-05-27 16:20:36

சூடானின் அரசியல் பதட்ட நிலைகள் குறித்து அச்சத்தை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர்.


மே 27, 2010 சூடானில் இடம்பெறும் அரசியல் பதட்ட நிலைகள், வன்முறைகள் மீண்டும் திரும்ப வழிவகுக்கலாம் என அச்சத்தை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

SPLA என்ற புரட்சியாளர்களும் சூடன் ராணுவமும் ஆயுத மோதல்களுக்குத் தயாராக உள்ள நிலையில் ஒரு சிறு பொறி கிளம்பினாலும், கடந்த உள்நாட்டுப் போர் காலத்தைப் போல் மக்கள் காடுகளில் அடைக்கலம் தேடவேண்டியிருக்கும் என்றார் ஆயர் மாக்ரம் காஸிஸ்.

கடந்த மாத அரசுத்தலைவர் தேர்தலில் ஓமர் அல் பஷீர் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அரசியல் பதட்ட நிலைகள் சூடானில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசுத்தலைவர் ஓமர் அல் பஷீர் சூடான் நாட்டை இஸ்லாமிய ஷாரியா சட்ட ஆட்சி முறையின் கீழ் கொணரவேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் தொடர்ந்து செயல்படுவதாகவும் தங்கள் அச்சத்தை வெளியிட்டுள்ளனர் சூடான் ஆயர்கள்.

1983ம் ஆண்டு துவங்கி 2005ம் ஆண்டு முடிவுற்ற சூடான் உள்நாட்டுப் போரில் 19 இலட்சம் பேர் வரை உயிரிழந்தனர்.








All the contents on this site are copyrighted ©.