2010-05-27 16:20:09

கிறிஸ்தவ எதிர்ப்பு ஸ்லோகங்கள் குறித்து பாகிஸ்தான் தலத்திருச்சபைக் கவலை.


மே 27, 2010 அண்மைக்காலங்களில் பாகிஸ்தானில் எழுந்துள்ள கிறிஸ்தவ எதிர்ப்பு ஸ்லோகங்கள் மற்றும் விளம்பரத் தட்டிகளால் ஆழ்ந்த அச்சம் கொண்டுள்ளதாக தலத்திருச்சபைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சூழல்களில் இறைவனின் பாதுகாப்பை நாடுவதாகவும் கிறிஸ்தவ எதிர்ப்பு விளம்பரத் தட்டிகள் விரைவில் அகற்றப்படும் என நம்புவதாகவும் கூறினார் லாகூர் பேராயர் லாரன்ஸ் சல்தான்ஹா.

எற்கனவே பலமுறை கிறிஸ்தவக் கோவில்களையும் கிறிஸ்தவப் பணியாளர்களையும் தாக்கியுள்ள Khatm-e-Nabuwat அமைப்பு இந்தக் கிறிஸ்தவ எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.