கல்வி கற்பிப்பது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை, எனினும் நாம் அதை விட்டுவிடக் கூடாது
- திருத்தந்தை
மே 27, 2010 கல்வி கற்பிப்பது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை, எனினும் நாம் அதை விட்டுவிடக்
கூடாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இத்தாலிய ஆயர்களிடம் இவ்வியாழனன்று கூறினார்.
தங்களது
61வது பொது அமர்வை நடத்திவரும் இத்தாலிய ஆயர்களுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை,
ஆயர்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தங்களது மேய்ப்புப்பணி திட்டத்தில் கல்வியை முக்கிய
தலைப்பாக எடுத்திருப்பது குறித்துப் பாராட்டினார்.
ஆசிரியர்கள், புதிய தலைமுறைகளுக்குச்
சாட்சி சொல்வதற்கு உதவும் வகையில், கிறிஸ்தவ அனுபவத்தின் உண்மை, அழகு மற்றும் நன்மைத்தனத்தை
நினைத்து வாழ்வதற்கு அவர்கள் வழி நடத்தப்படுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இன்றைய
இத்தாலிய சமுதாயம், இத்தகைய விழுமியங்களின் நிச்சயமற்றதன்மையினால் குறிக்கப்பட்டதாய்
இருக்கின்றது என்றுரைத்த அவர், இது கலாச்சார மற்றும் ஆன்மீக நெருக்கடியின் அடையாளமாக
இருக்கின்றது என்றும் கூறினார்.
வேலைவாய்ப்பின்மை நெருக்கடியின் எதிர்நிலை விளைவுகளைக்
களைவதற்கு அரசு அதிகாரிகளும் பொதுநிலை அதிகாரிகளும் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்
பாப்பிறை.