2010-05-27 16:19:42

இலங்கை காரித்தாஸ் பணிகளுக்கு அமைச்சரின் நன்றி.


மே 27, 2010 இலங்கையின் 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றியுள்ள காரித்தாஸ் உதவி நிறுவனத்தின் பணிகளுக்கென தன் நன்றியை வெளியிட்டார் அந்நாட்டு மீள்குடியிருப்புத் துறைக்கான அமைச்சர் மில்ரோய் ஃஃபெர்னாண்டோ.

கொழும்புவின் கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனத்தை புதனன்று சென்று பார்வையிட்டு, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் தொடர்ந்த ஒத்துழைப்பை வேண்டிய அமைச்சர், சுனாமியின் போதும் உள்நாட்டுப்போரின் போதும் இலங்கை கத்தோலிக்க காரித்தாஸின் அர்ப்பணப் பணி குறிப்பிடும்படியானது என்றார்.

போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் 1700 குழந்தைகளுக்கு காரித்தாஸ் அமைப்பு கல்விக்கான உதவிகளையும் உணவு உதவிகளையும் வழங்கியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.