2010-05-26 15:32:24

மே 27 – நாளும் ஒரு நல்லெண்ணம்


பகிர்ந்து கொள்வோம். முடிந்ததைத்தான்.

பகிரும்போது குறையத்தான் செய்யும்.

பொருட்கள் மட்டுமல்ல, கவலைகளும் தான்.

கவலைகள் குறையும்போது அவ்விடத்தை நிரப்புவது

வெறுமையல்ல, மாறாக நம்பிக்கை.

நம்பிக்கை இருக்குமிடத்தில்தான் கவலைகளைப் பகிர முடியும்.

கவலைகளைப் பகிரும்போதுதான் நம்பிக்கையைப் பெற முடியும்.

அனுபவங்கள் வேறு வேறு.

அதனால் ஆறுதல் வார்த்தைகளும் வித்தியாசமானதாக இருக்கும்.

ஒளிக்குள் இருளைத் தேடிக்கொண்டிருப்பவனுக்கு,

அது இருளுக்குள்ளான ஒளியாய் இருக்கலாம்.

கவலைகள் பகிரப்படும்போதுதான் நாம்

நிழலடியில் நிற்பதே தெரியக்கூடும்.

பகிரப்படும் வேதனைகள்

வார்த்தைகளால் மரித்துப் போகக்கூடும்.

பகிர்வதன் மூலம் நாம் இணைவோம்.

பாலைவன மணல் போல் பிரிந்து நிற்பதல்ல,

சேற்று மண்ணாய் இணைந்து வாழ்வெனும் துளிர் விட

ஆதாரமாவதே பகிரும் வாழ்வு.








All the contents on this site are copyrighted ©.