விமான விபத்தில் பலியான குடும்பங்களுக்கு உதவ இந்திய ஆயரின் திட்டம்.
மே 25, 2010. மங்களூர் விமான விபத்தினால் தன் மறை மாவட்டத்தில் பலியான 17 முதல் 18
பேரின் குடும்பங்களைத் தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கான உதவிகளைச் செய்ய உள்ளதாகத்
தெரிவித்துள்ளார் அப்பகுதி ஆயர்.
பங்குக் குருக்கள் மூலம் இக்குடும்பங்களின் தேவைகள்
ஆராயப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படும் என்றார் மங்களூர் ஆயர் Aloysius Paul
D' Souza.
இவ்விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் சிறப்புத் திருப்பலி
ஒன்று விரைவில் பொதுமக்களுடன் நிறைவேற்றப்படும் எனவும் கூறினார் ஆயர்.