2010-05-25 14:46:25

இலங்கையின் வடபகுதி குழந்தைகளுக்கு கொழும்புச் சிறார்களின் உதவி.


மே 25, 2010. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு நாட்டிற்குள்ளேயே அகதிகளாக வாழும் வடபகுதிக் குழந்தைகளுக்கு உதவுவதற்கென 30 இலட்சம் இலங்கை ரூபாய்களைத் திரட்டியுள்ளனர் கொழும்பு இளம் கத்தோலிக்கர்கள்.

2008ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்நிதித்திரட்டல் மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு துண்டுகள், குடைகள், பள்ளிப் பைகள், மதிய உணவை எடுத்துச் செல்லும் பெட்டிகள், புத்தகங்கள் மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வடபகுதிச் சிறார்களூக்கு வழங்கியுள்ளனர் கொழும்பு இளம் கத்தோலிக்கர்கள்.

இலங்கையின் தென் பகுதி மாணவர்கள் வடபகுதி மாணவர்களில் அக்கறையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதாகவும், அனைத்துத் தரப்பினரும் சகோதரர்கள் என்பதை வலியுறுத்துவதாகவும் இளைஞர்களிடையேயான இந்நிகழ்வு இருந்தது என்றார் இதில் கலந்து கொண்ட குரு Malcolm Perera.

வடபகுதியில் போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்துள்ள போதிலும் இன்னும் 60,000 சிறார்கள் பள்ளிக்குச் செல்லமுடியாமல் உள்ளனர் மற்றும் 106 பள்ளிகள் மூடியே உள்ளன.








All the contents on this site are copyrighted ©.