மே23, தூய ஆவியார் பெருவிழா நற்செய்தி யோவா.14.15-16,23-26
அக்காலத்தில், இயேசு தம் சீடருக்குக் கூறியது : நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால்
என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். ″உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை
உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். என்மீது
அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார்.
நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக்
கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய
தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என்
பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்
தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.