இலங்கையில் கனமழையினால் பாதிப்புக்கு உள்ளானோருக்குக் கத்தோலிக்கத் திருச்சபை உதவி
மே22,2010 இலங்கையின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்றினால் இடம்பெயர்ந்துள்ள
ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்குக் கத்தோலிக்கத் திருச்சபை உதவிகளைச் செய்து
வருகின்றது.
இலங்கையின் மேற்கே Gampaha, Colombo, Kalutara போன்ற மாவட்டங்கள்
இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 220 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, 1039 வீடுகள்
சேதமடைந்துள்ளன மற்றும் பல குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன.
இலங்கை
காரித்தாஸ் அமைப்பு ஐந்து இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக நிவாரண உதவியை வழங்கிவரும் வேளை
அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்றது என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த
இயற்கைப் பேரிடரில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர்.