தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ள அருட்திரு கிறிஸ்துதாசுக்கு மகராஷ்டிர முதலமைச்சர்
பாராட்டு
மே21,2010 பீஹாரின் சுந்தர்பூர் கிராமத்தில் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட தொழுநோயாளிகளுக்கு
சிகிச்சை அளித்துள்ள சமூக நடவடிக்கையாளர் அருட்திரு கிறிஸ்துதாஸ் அவர்களுக்கு மகராஷ்டிர
முதலமைச்சர் Ashok Chavan விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
“வாரம் - 2009ம் ஆண்டின்
மனிதர்” என்ற விருதை மும்பையில் பெற்றுள்ள அருட்திரு கிறிஸ்துதாஸ், இந்த விருதானது சமூகப்பணி
செய்யும் அனைவருக்குமான விருது என்று கூறினார்.
இவ்விருதை வழங்கி உரையாற்றிய மகராஷ்டிர
முதலமைச்சர் Chavan, மகராஷ்டிர அரசு ராஜீவ் காந்தி சுகாதார மையத்தைத் தொடங்கி வறுமைக்
கோட்டிற்குக் கீழ்வாழும் மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் என்று அறிவித்தார்.