2010-05-21 15:17:07

ஐரோப்பா தனது கிறிஸ்தவ மூலத்திற்குத் திரும்பி வராதவரை அதற்கு எதிர்காலம் இல்லை - கர்தினால் வால்ட்டர் காஸ்பர்


மே21,2010 ஐரோப்பா தனது கிறிஸ்தவ மூலத்திற்குத் திரும்பி வராதவரை அதற்கு எதிர்காலம் இல்லை என்று திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் வால்ட்டர் காஸ்பர் தெரிவித்தார்.

ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட கர்தினால் காஸ்பர், ஐரோப்பா தனது எதிர்காலத்தைக் கொண்டிருக்க விரும்பினால், அது முதன் முதலில் தனது கிறிஸ்தவ மூலங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று பேசினார்.

வத்திக்கானி்ல் “இரஷ்ய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் நாட்கள்” என்ற தலைப்பில் இப்புதன் முதல் இவ்வியாழன் வரை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக உரோம் புனித கத்ரீன் ஆர்த்தாடாக்ஸ் ஆலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு கூறினார் திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் காஸ்பர்.

இந்நிகழ்ச்சிகளின் நிறைவாக, இவ்வியாழன் மாலை வத்திக்கான் பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கத்தில் இரஷ்ய ஆர்த்தாடாக்ஸ் சபை இசை நிகழ்ச்சியை நடத்தியது. இது, திருத்தந்தை 16ம் பெனடிக்டை கௌரவிப்பதற்காக நடத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.