2010-05-20 15:01:48

இலங்கை திரும்பும் தமிழ் அகதிகளுக்கு போதிய பாதுகாப்பில்லை என்கிறார் மனித உரிமை நடவடிக்கையாளர்.


மே20, 2010. இலங்கை திரும்பும் தமிழ் அகதிகளுக்கு போதிய பாதுகாப்பில்லை என அறிவித்துள்ளார் அந்நாட்டிற்குச் சென்றுத் திரும்பியுள்ள மனித உரிமை நடவடிக்கையாளர் Phil Glendenning.

போர் காலத்தின் போது நாட்டை விட்டு வெளியேறிய ஒவ்வொர் இலங்கைத் தமிழரையும் அந்நாட்டு அரசு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக நோக்கி நடத்துவதாக உரைத்த, அகதிகளுக்காக உழைக்கும் ஆஸ்திரேலிய மையத்தின் இயக்குனர் Glendenning, அண்மை மாதங்களில் நாடு திரும்பியுள்ள அகதிகள் அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் போர் இடம்பெறாதிருப்பது என்பது அமைதியைக்கொணரவில்லை என மேலும் கூறினார் அவர்.








All the contents on this site are copyrighted ©.