இலங்கை அரசுத்தலைவர் - கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றி வரும் சேவைகளுக்கு நன்றி
மே19,2010 இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றி வரும் சேவைக்கு நன்றி தெரிவித்தார்
அரசுத்தலைவர் மகிந்த ராஷபக்சே.
கொழும்பு பேராயர் மால்கம் இரஞ்சித்தை அவரது இல்லத்தில்
கடந்த வாரத்தில் சந்தித்த அரசுத்தலைவர் ராஷபக்சே, நாட்டைப் பாதித்து வரும் பல விவகாரங்களில்
கத்தோலிக்கத் திருச்சபையின் தொடர்ந்த ஈடுபாட்டிற்கும் அதன் பணிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
அதேசமயம்,
பேராயர் இரஞ்சித்தும், கத்தோலிக்கத் திருச்சபை நாட்டின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து தன்னை
முழுமையாய் அர்ப்பணிக்கும் என்று உறுதி கூறினார்.
அனைத்துச் சிறாரும் கல்வி பெற
வேண்டும் என்ற திட்டத்தில் அரசுடன் சேர்ந்து திருச்சபையும் உழைக்கத் தயாராக இருப்பதாகவும்
தெரிவித்த பேராயர் இரஞ்சித், நாட்டின் தமிழ் சமுதாயத்திற்கும் போரினால் பாதிக்கப்பட்ட
பகுதிகளுக்கும் உதவுமாறு அரசுத்தலைவர் ராஷபக்சேவிடம் விண்ணப்பித்தார் என்று இணையதளச்
செய்தி கூறுகிறது.