அந்த ஊரின் பெரிய பணக்காரரின் ஈமச்சடங்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது அவ்விடத்தில்
புதியவர் ஒருவர், மற்றவர்களைப் போலக் கதறிக் கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது அந்த
ஊர்ப் பெரியவர் ஒருவர் அந்தப் புதியவரிடம், “நீங்கள் இறந்து போனவர்க்கு உறவினரா?” என்று
கேட்டார். இல்லை என்றார் அந்தப் புதியவர். “பிறகு ஏன் இப்படி குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறீர்கள்?”
என்று பெரியவர் கேட்டதும், “நான் உறவினன் இல்லையே என்பதற்காகத்தான் அழுகிறேன்” என்றார்
அந்தப் புதியவர்.
உள்ளதைக் கொண்டு மனநிறைவு கொள். உண்மையில் அதுவே மகிழ்ச்சியின்
மறைபொருள்