சீடன் ஒருவன், தனது ஒட்டகத்தின் மீதேறி சூஃபி குரு ஒருவர் தங்கியிருந்த கூடாரத்துக்கு
வந்தான். ஒட்டகத்திலிருந்து இறங்கிக் கூடாரத்தின் உள்ளே சென்று தலை வணங்கிக் கூறினான்
– குருவே, கடவுள்மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதால் என் ஒட்டகத்தைக் கட்டாமல்
வெளியே நிறுத்திவிட்டு வந்திருக்கிறேன் என்று. அப்போது குரு, முட்டாளே முதலில் உன் ஒட்டகத்தைக்
கட்டிவிட்டு வா என்று கூறினார். அவர் சொன்னார்- உன்னால் முடிந்த காரியத்தை நீ செய்யாத
போது கடவுள் கவலைப்படமாட்டார் என்று