திருத்தந்தை – இயேசு என்றும் நம் அருகில் இருக்கிறார்
மே17,2010 இயேசு விண்ணகத்திற்குச் சென்றுவிட்டாலும், கிறிஸ்தவப் பாதையில் நம்மோடு நடப்பதற்கு
அவர் எப்பொழுதும் நமக்கு நெருக்கமாகவே இருக்கிறார் என்று இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி
உரையில் கூறினார் திருத்தந்தை.
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பின்னர்
நாற்பதாம் நாளில் கொண்டாடப்படும் இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா, இத்தாலியிலும் பிற
நாடுகளிலும் இந்நாளில் சிறப்பிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி அப்பெருவிழா பற்றிய சிந்தனைகளை
வழங்கினார் திருத்தந்தை.
இந்நாளையத் திருவழிபாட்டு வாசகங்களில் இயேசு தம் சீடர்களிடமிருந்து
கடைசியாகப் பிரிந்து செல்வது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது, ஆனால் இது கைவிடுதல் அல்ல,
ஏனெனில் இயேசு புதிய வடிவில் என்றென்றும் அவர்களோடு இருக்கிறார், நம்மோடு இருக்கிறார்
என்றும் திருத்தந்தை கூறினார்.
தங்களின் விசுவாசத்திற்காக நசுக்கப்படுகிறவர்களின்
தோழனாகவும், ஓரங்கட்டப்பட்டோரின் இதயத்திலும் வாழ்வுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டவர்களிலும்
இயேசு உடன் இருக்கிறார் என்றார் திருத்தந்தை.
திருச்சபையில், குறிப்பாக, இறைவார்த்தை
மற்றும் திருவருட்சாதனங்களில் இயேசுவின் தொடுதல் இருப்பதை நம்மால் பார்க்க முடியும் மற்றும்
கேட்க முடியும் என்றும் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறன்று
உலக சமூகத் தொடர்பு நாள் கடைபிடிக்கப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.