2010-05-17 15:38:22

திருச்சபையின் அமைதி மற்றும் நீதி ஆணையங்களின் பணி திருச்சபைக்கு மட்டும் ஆனதல்ல மாறாக உலகின் சேவைக்கானது என்கிறது இங்கிலாந்தின் தேசிய அவைக் கூட்டம்.


மே17,2010 இங்கிலாந்தில் தேசிய அளவிலான கத்தோலிக்க நீதி மற்றும் அமைதி அவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஃப்ராங்க் ரீகன், ஏழ்மையாலும் மோதல்களாலும் சுற்றுச்சூழல் அழிவாலும் பாதிக்கப்பட்டிருக்கும் உலகில் அதன் வாழ்வுக்காக உழைக்கவேண்டியது இவ்வவையின் கடமை என்றார்.

கத்தோலிக்க சமூகப்படிப்பினைகளின் துணை கொண்டு ஏழைகளின் மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டியது திருச்சபையின் நீதி மற்றும் அமைதி அவையில் பணியாற்றுவோரின் கடமை என்றார் அவர்.

இலண்டனில் இடம்பெற்ற தேசிய அளவிலான கத்தோலிக்க நீதி மற்றும் அமைதி அவைக் கூட்டத்தில், சுற்றுச் சூழல் பிரச்னையில் பாராளுமன்ற அங்கத்தினர்களை சந்தித்தல், காடுகளை அழித்தலுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவைகளுக்கான நடவடிக்கைகளும் ஆலோசிக்கப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.