நீதிபதிகள், நீதியின் பாதையில் நடப்பதற்கு அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதே ஒரேவழி
- தென்அமெரிக்க கர்தினால்
மே15,2010 நீதிபதிகள், பழியுணர்வு வெஞ்சினம் ஆகிய உணர்வுகளுக்கு அடிமையாகாமல் உண்மை மற்றும்
நீதியின் பாதையில் நடப்பதற்கு அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதே ஒரேவழி என்று தென்அமெரிக்க
கர்தினால் ஒருவர் கூறினார்.
தென்அமெரிக்க நாடான பெரு நாட்டு லீமா நகர் கர்தினால்
Juan Luis Cipriani Thorne நீதித்துறையினருக்கு நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு கூறினார்.
பெரு
நாட்டு தலைமை நீதிபதி Gladys Echaiz Ramos உட்பட நீதித்துறை அதிகாரிகளுக்குத் திருப்பலி
நிகழ்த்திய கர்தினால் Cipriani, நீதிபதிகள் தங்களது பணியில் நேர்மையை மைல்கல்லாக பதிக்க
வேண்டும் என்றார்.
இதன்மூலம், உண்மையையும், சட்டத்தையும் குடிமக்களின் உரிமைகளையும்,
வாழ்வதற்கான உரிமையையும் எப்பொழுதும் தேடுகிறவர்களாக இருப்பார்கள் என்றும் கர்தினால்
தெரிவித்தார்.