மே14,2010 ஜெர்மனியில் கத்தோலிக்கரும் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையினரும் இணைந்து மியுனிச்
நகரில் கிறிஸ்தவ ஒன்றிப்பு கருத்தரங்கு ஒன்றை நடத்தி வருகின்றனர்.
ஜெர்மன் கத்தோலிக்கரின்
மையக் கமிட்டியும் ஜெர்மன் இவாஞ்சலிக்கல் அவையும் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கில்
ஏறக்குறைய 1,30,000 பேர் கலந்து கொள்கின்றனர்.
நீங்கள் நம்பிக்கை பெறும்படியாக
என்ற தலைப்பிலான, இக்கருத்தரங்கு தொடங்கிய இப்புதனன்று மூன்று இலட்சம் பேர் மனிதச்சங்கிலி
அமைத்து நகரத் தெருக்களின் வழியே வானகத்தந்தையே என்ற கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லிக்
கொண்டு சென்றனர்.
இக்கருத்தரங்கு இஞ்ஞாயிறன்று நிறைவடையும். இதேபோன்ற முதல் கருத்தரங்கு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெர்லினில் நடைபெற்றது. அதில் ஐந்து இலட்சம் பேர் கலந்து
கொண்டனர்.