2010-05-13 16:08:26

துறவறத்தாரின் வாழ்வு சீடத்துவ பண்புடையதாய் இருக்க வேண்டும் - திருத்தந்தை,


மே13,2010 அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொரு துறவறத்தாரின் வாழ்வும் நம்பிக்கைக்குரியதாய் தங்கள் அழைப்புக்கு விசுவாசமாய் இருப்பதாய், இறைவனைப் பின்பற்றும் சீடத்துவ பண்புடையதாய் இருக்க வேண்டும் என மாலை திருப்புகழ்மாலை

செபத்தில் உரையாற்றிய திருத்தந்தை, குருக்களுக்கான ஆண்டு நிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் நீங்கள் உங்களின் குருத்துவ அழைப்புக்கு விசுவாசமுடையவர்களாக இருந்து இறைவனின் அபரிவிதமான கொடைகளைப் பெறுவீர்களாக என்று அங்கு கூடியிருந்த குருக்கள் மற்றும் துறவறத்தாரை நோக்கி வாழ்த்தினார்.

இன்றைய உலகில் குருக்களின், துறவறத்தாரின் சாட்சிய வாழ்வின் அத்தியாவசியத் தேவை குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இன்றைய உலகம் முடிவற்ற மீட்பை குறித்து கவலையின்றி வாழ்ந்து வரும் நிலையில் இச்சாட்சியம் அவசியமாகின்றது. இத்தகைய ஒரு சூழலில் புனித ஜான் மரிய வியான்னியின் எடுத்துக்காட்டு நமக்கு உதவட்டும். அன்னைமரியின் எடுத்துக்காட்டையும் பின்பற்றுங்கள். ஒருவருக்கொருவர் செபியுங்கள் என்ற அழைப்பை விடுத்தத் திருத்தந்தை, குருத்துவ மாணவர்களின் பொறுப்புணர்வு தங்களையே உருவாக்குவதில் அர்ப்பணம் போன்றவைகளுக்கும் அழைப்பு விடுத்தார்







All the contents on this site are copyrighted ©.