ஈராக்கில் வன்முறைகள் நிறுத்தப்பட திருச்சபைத் தலைவர்கள் மீண்டும் அழைப்பு
மே13,2010 ஈராக்கில் இடம் பெற்றுள்ள அண்மை வன்முறை தாக்குதல்கள் பற்றிக் கவலை தெரிவித்த
அதேவேளை, இவ்வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்
அந்நாட்டுத் திருச்சபைத் தலைவர்கள்.
ஈராக் கிறிஸ்தவத் தலைவர்கள் கழகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில், அந்நாட்டின் அனைத்து அரசு அதிகாரிகளும் அரசியல் கட்சிகளும், பொது நலன் மற்றும்
குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
மே2ம்
தேதி மொசூலில் கிறிஸ்தவ பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்ட பின்னர் வன்முறைகள் தொடர்ந்து
இடம் பெற்று வருகின்றன என்றும் அத்தலைவர்களின் அறிக்கை கூறுகின்றது.
ஈராக் கிறிஸ்தவத்
தலைவர்கள் கழகத்தில் 14 கிறிஸ்தவ சமூகங்கள் உறுப்பினர்களாக உள்ளன.