அன்னை தெரேசா பிறந்ததன் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை மக்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கின்றனர்
மே13,2010 கொல்கட்டா முத்திப் பேறு பெற்ற அன்னை தெரேசா பிறந்ததன் நூற்றாண்டு விழா சிறப்பிக்கப்படும்
நாளுக்காக மக்கள் ஆவலோடு காத்திருப்பதாக பெங்கால் கத்தோலிக்கக் கழகத் தலைவர் யூஜின் கொன்சால்வெஸ்
கூறினார்.
அன்னை தெரேசாவுக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்படுவதற்காக கொல்கட்டா
மக்கள் உருக்கமுடன் செபித்து வருவதாகவும் கொன்சால்வெஸ் தெரிவித்தார்.
வருகிற ஆகஸ்ட்
17 க்கும் செப்டம்பர் 13 க்கும் இடைப்பட்ட காலத்தில் இக்கொண்டாட்டங்கள் இடம் பெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பிறந்த அன்னை தெரேசா, 1997ஆம்
ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இறந்தார்.