திருத்தந்தையின் “நாசரேத்தூர் இயேசு" புத்தகத்தின் இரண்டாவது தொகுப்பு முடிக்கப்பட்டுள்ளது
மே11,2010 "நாசரேத்தூர் இயேசு" என்ற தமது புத்தகத்தின் இரண்டாவது தொகுப்பை திருத்தந்தை
16ம் பெனடிக்ட் முடித்துள்ளார் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
கிறிஸ்துவின்
திருப்பாடுகள் மற்றும் உயிர்ப்பை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், சில நாடகளுக்கு
முன்னர் விநியோகஸ்தர்களிடம் கொடுக்கப்பட்டது என்றும் அவ்வலுவலகம் கூறியது.
திருத்தந்தையின்
80வது பிறந்தநாளையொட்டி 2007ம் ஆண்டு ஏப்ரலில் இதன் முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது.