உலகில் குழந்தைத் தொழில் முறை அகற்றப்படுவதற்கான முயற்சிகள் புதுப்பிக்கப்பட வேண்டும்-ஐ.நா.வின்
புதிய ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
மே10,2010 உலகில் மிகமோசமான விதத்தில் இடம் பெறும் குழந்தைத் தொழில் முறையை ஒழிப்பதற்கான
முயற்சிகள் தொய்வு கண்டு வரும்வேளை, சமுதாயத்தின் வடுவாக இருக்கும் இதனை அகற்றுவதற்கு
முயற்சிகள் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.வின் தொழில் நிறுவனத்தின் புதிய
ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தத் தொழில் நிறுவனம் வெளியிட்ட குழந்தைத் தொழில் குறித்த
அறிக்கையின்படி, 2016ம் ஆண்டுக்குள் இது ஒழிக்கப்படுவதற்கான இலக்கை அடைய வேண்டுமானால்
அதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட வேண்டுமெனப் பரிந்துரைக்கிறது.
2004லிருந்து
2008ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் குழந்தைத் தொழிலாளரின் எண்ணிக்கை 22 கோடியே 20
இலட்சத்திலிருந்து 21 கோடியே 50 இலட்சமாகக் குறைந்துள்ளது, அதாவது 3 விழுக்காடு குறைந்துள்ளது.
நெதர்லாண்ட்ஸில்
இத்திங்களன்று ஆரம்பித்துள்ள உலகக் குழந்தைத் தொழில் கருத்தரங்கை முன்னிட்டு இவ்வறிக்கை
வெளியிடப்பட்டுள்ளது.