இந்தியாவில் வாடகை தாய்ப் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும்
மே10,2010 இந்தியாவில் வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாக வாடகை தாய்த் தொழிலில் இறங்கும்
பெண்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் எனவும் இவர்கள் இத்தொழிலில் மனநிறைவோடு
ஈடுபடுவதால் அவர்களுக்குப் புதியதொரு மகிழ்ச்சி கிடைப்பதாகவும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இந்த
விடயம் உலக அளவில் இந்தியாவில் தான் மலிவான விலையில் முடிக்கப்பட்டு விடுகிறதெனவும் கூறும்
அச்செய்தி, இந்தியாவின் வட மாநிலங்களில் இதற்கான மருத்துவமனைகளில் இருபது இலட்சம் ரூபாய்
வரை பெறப்படுகிறது எனவும் தெரிவிக்கிறது.
வாடகை தாய்க்கு 80 ஆயிரம் ரூபாய் முதல்
2 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 150
குழந்தையாவது வாடகைக்கு பிறந்து விடுகிறது என ஒரு புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது.
வாடகைத் தாயை அமர்த்துதல், மருத்துவச் செலவு, குழந்தை பிறப்பு மற்றும் சட்டத்திற்குட்பட்ட
விடயத்திற்கான செலவு ஆகியவற்றை அந்த மருத்துவமனையே பார்த்துக்கொள்ளுகிறதெனவும் அச்செய்தியில்
கூறப்பட்டுள்ளது.