1502 – கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) ஸ்பெயினிலிருந்து
தொடங்கினார்.
1874 - குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி
(omnibus) பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1919 - இலங்கையில் முதன் முதலாக
உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது. அரிசிப் பாவனை மாதமொன்றிற்கு சராசரியாக 30,000
டன்னிலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது.
1933 - மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு
இயக்கத்தைக் கைவிட்டார்.
1956 - உலகின் 8-வது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சி
முதன் முதலாக ஜப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டது.
1985 - காரைக்குடியில் அழகப்பா
பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.