அமெரிக்க ஐக்கிய நாட்டில் அன்னை தெரேசா தபால்தலை வெளியிடத் திட்டம்
மே08,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டு தபால்துறை, வருகிற செப்டம்பரில் முத்திப்பேறு பெற்ற
அன்னை தெரேசா தபால்தலையை வெளியிடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று கூறியுள்ளது.
இந்தத்
தபால்தலையானது வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பிறந்த அன்னை தெரேசா, 1997ம் ஆண்டு செப்டம்பர்
5ம் தேதி இறந்தார்.
கல்கத்தா அன்னை தெரேசா பிறந்ததன் நூறாம் ஆண்டையொட்டி அவரது
தபால்தலை வெளியிடப்பட வேண்டும் என்று அமெரிக்க கத்தோலிக்க குழு ஒன்று கையெழுத்து வேட்டையில்
இறங்கியது. அதில் ஒரு இலட்சத்து 38 ஆயிரம் பேர் கையெழுத்திட்டிருந்தனர்.