2010-05-06 16:35:12

மே 07 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1272 – திருத்தந்தையின் தேர்தலை ஒழுங்குபடுத்துவதற்காக பிரான்சில் லயன்ஸ் இரண்டாவது பொதுச் சங்கம் ஆரம்பமானது.

1348 – பிராக்கிலுள்ள அமைக்கப்பட்ட சார்லஸ் பல்கலைக்கழகம் மத்திய ஐரோப்பவில் உருவான முதல் பல்கலைகழகமானது.

1539 - சீக்கிய மதத்தை ஆரம்பித்த குரு நானக் இறந்தார்

1664 – வெர்செய்ல்ஸ் அரண்மனையை பிரான்ஸ் மன்னன் 14ம் லூயிஸ் அமைத்தார்.

1861 - நோபல் பரிசு பெற்ற வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பிறந்தார்,

1895 - இரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் (Alexander Stepanovich) உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் இரஷ்யாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது

1999 – திருத்தந்தை 2ம் ஜான் பால் ரொமேனியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். 1054ம் மிகப்பெரும் பிரிவினைக்குப் பின்னர் பெரும்பான்மையான கீழைரீதி கிறிஸ்தவர்கள் வாழும் நாட்டிற்குச் சென்ற முதல் திருத்தந்தையானார்.

2007 – பெரிய ஏரோதின் கல்லறை எருசலேமில் கண்டுபிடிக்கப்பட்டது








All the contents on this site are copyrighted ©.