தவறானப் பாலியல் விவகாரத்தைக் கையாள உதவும் இந்திய ஆயர்களின் கையேடு வருகிற ஜூனில் தயாராக
இருக்கும் - அருள்திரு பாபு ஜோசப்
மே06,2010 சிறாரிடம் தவறானப் பாலியல் செயல்களில் ஈடுபடும் குருக்கள் குறித்த விவகாரத்தைக்
கையாள்வதற்கான இந்திய ஆயர்களின் வழிமுறைக் கையேடு வருகிற ஜூனில் தயாராக இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஆயர் பேரவையின் பேச்சாளர் அருள்திரு பாபு ஜோசப் கூறினார்.
இந்திய
ஆயர் பேரவையின் நிரந்தரக் குழு, கடந்த மாதம் 25 முதல் 28 வரை பெங்களூரில் நடத்திய கூட்டத்தில்
இந்தத் தலைப்பு முக்கியமானதாக இருந்தது என்று குரு பாபு ஜோசப் தெரிவித்தார்.
ஆயர்கள்
தயாரித்து வரும் இத்தொகுப்பில் குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழில்முறை, பெண்குழந்தைப்
பாகுபாடு போன்ற விவகாரங்களும் பேசப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
கொள்கைகள்
இந்தியாவில் வகுக்கப்பட்டாலும் அதன் தொகுப்பு வத்திக்கானுக்கு அனுப்பப்படும் என்றும்
குரு பாபு ஜோசப் தெரிவித்தார்.