திருத்தந்தையின் போர்த்துக்கல் திருப்பயணம் அன்னைமரியை மையப்படுத்துவதாக இருக்கும் -
திருப்பீடப் பேச்சாளர்
மே05,2010 இம்மாதம் 11 முதல் 14 வரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மேற்கொள்ளவிருக்கும்
போர்த்துக்கல் நாட்டுக்கானத் திருப்பயணம் அன்னைமரியின் ஆன்மீகத்தை மையப்படுத்துவதாக இருக்கும்
என்று திருப்பீடப் பேச்சாளர் சேசு சபை அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
இத்தாலிக்கு
வெளியேயான திருத்தந்தையின் இந்த 15வது அப்போஸ்தலிக்கத் திருப்பயணம் பற்றி நிருபர் கூட்டத்தில்
செய்தி வெளியிட்ட அருள்தந்தை Lombardi, சிறார் ஜசிந்தா, பிரான்சிஸ் ஆகியோருக்கு முத்திப்பேறு
பட்டம் வழங்கியதன் பத்தாம் ஆண்டின் நிறைவைக் கொண்டாடுவதாக இருக்கும் என்றார்.
இவ்விருவரும்
அவர்களின் உறவினர் லூசியாவுடன் 1917ல் பாத்திமாவில் அன்னைமரியைக் காட்சியில் கண்டவர்கள்