2010-05-04 16:03:55

பிலிப்பைன்சில் பொதுத் தேர்தல்கள் அமைதியான விதத்தில் நடைபெறுவதற்கு இராணுவ அதிபர் ஆயர்களிடம் உறுதி


மே04,2010 பிலிப்பைன்சில் வரும் வாரம் இடம்பெறவிருக்கின்ற பொதுத் தேர்தல்கள் அமைதியான விதத்தில் நடைபெறுவதற்கு அந்நாட்டு இராணுவம் உழைத்து வருவதாக இராணுவ அதிபர் Delfin Bangit ஆயர்களிடம் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் நிரந்தரக் குழுவினரோடு இச்செவ்வாயன்று கூட்டம் நடத்திய இராணுவ ஜெனரல் Bangit, இம்மாதம் 10ம் தேதி நடைபெறும் தேர்தல்களில் இராணுவம் சட்டத்தைக் கையிலெடுத்து தேர்தல்கள் அமைதியாக இடம் பெறுவதற்கு உழைக்கும் என்று உறுதி கூறினார்.

தேர்தல்கள் முழுவதும் ஒழுங்காய் நடக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் குழப்பங்கள் ஏற்படாமல் இராணுவம் பார்த்துக் கொள்ளும் என்றும் பிலிப்பைன்ஸ் இராணுவ ஜெனரல் ஆயர்களிடம் உறுதி வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.