தமிழ்ப் பத்திரிகையாளர் திஸ்ஸைநாயகத்திற்கு இலங்கை அரசுத்தலைவர் மன்னிப்பு
மே03,2010 மே03 இத்திங்களன்று உலக பத்திரிகை சுதந்திர நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி,
இலங்கையில் 2008ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டு இருபது ஆண்டுகள் சிறைத்
தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜெயப்பிரகாஷ் திஸ்ஸைநாயகம் என்ற தமிழ்ப் பத்திரிகையாளருக்கு
அந்நாட்டு அரசுத்தலைவர் மகிந்த ராஷபக்ஷ மன்னிப்பு வழங்கியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாதத்திற்கு
ஆதரவளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தண்டனை விதிக்கப்பட்ட திஸ்ஸைநாயகத்திற்கு உலக
பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை வெளியுறவு
அமைச்சர் கூறியுள்ளார்.
சர்வதேச பத்திரிகை சுதந்திர விருது, இன்னும், தைரியமான
மற்றும் அறநெறி ஊடகவியலுக்கான Peter Mackler விருதையும் 2009ம் ஆண்டில் பெற்றிருப்பவர்
திஸ்ஸைநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.