2010-05-03 16:33:05

இலங்கை கத்தோலிக்க மீனவர்களுக்கு நிதியுதவி வழங்க அருட்பணியாளர் அரசை வலியுறுத்தல்


மே03,2010 இலங்கையில் கடும் ஏழ்மையில் வாடும் ஆயிரக்கணக்கானக் கத்தோலிக்க மீனவர்களுக்கு நிதியுதவி வழங்கவும் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும் வேண்டுமென்று அந்நாட்டு கத்தோலிக்க அருட்பணியாளர் ஒருவர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மீனவ சமுதாயம் தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சனைகளை நேரிடையாக வந்து பார்க்குமாறு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள அருட்பணியாளர் சிரில் காமினி, மீனவத் தொழிலை மேம்படுத்துமாறும் பரிந்துரைத்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தன்று இவ்வழைப்பை முன்வைத்தார் குரு காமினி.








All the contents on this site are copyrighted ©.