இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டு வருவதைத் தடுப்பதற்கு கிறிஸ்தவ சபைகள் முயற்சி
மே03,2010 இந்தியாவில் பரவலாக கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டு வருவதைத் தடுக்கும் நோக்கத்தில்
நாட்டின் எல்லாக் கிறிஸ்தவ சபைகளையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது
வட இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு ஒன்று.
மத்திய பிரதேச மாநிலத்தில்
அண்மையில் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையைச் சுட்டிக்காட்டியுள்ள அம்மாநில
கிறிஸ்தவ அவைத் தலைவர் Kurishinkal Joshi, அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால்,
அடுத்த கந்தமால் மாவட்டமாக மத்திய பிரதேச மாநிலம் இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இன்டோரில்
இஞ்ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு கூறினார் ஜோசி. இதில் கலந்து கொண்ட இன்டோர்
கத்தோலிக்க ஆயர் Chacko Thottumarickal இத்தகைய அமைப்புக்கு இசைவு தெரிவித்துள்ளார்.