மே02,2010 நேயர்களே, இஞ்ஞாயிறன்று திருச்சி புனித வளனார் கல்லூரியில் நமது நேயர் சந்திப்புக்
கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றதாக, அதை நடத்துவதற்கு வத்திக்கான் வானொலி தலைமையகத்திலிருந்து
சென்றிருந்த அருட்தந்தை ஜெரோம்சே.ச., திருவாளர் கிறிஸ்டோபர், இன்னும் நம் நேயர்கள் பலரும்
மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள். வத்திக்கான் வானொலி தலைமையகத்திலிருந்து தொலைபேசி வழியாக
அவர்களிடம் பேசினோம். முதன்முறையாக இத்தகைய சந்திப்பை நடத்திய நமது தமிழ்ப்பிரிவு தலைவர்
அருட்தந்தை ஜெரோம் சே.ச., பல நேயர்கள், வத்திக்கான் வானொலி தமிழ்ப்பிரிவின் தயாரிப்பாளர்
மற்றும் அறிவிப்பாளர் திருவாளர் கிறிஸ்டோபர் என்ற வரிசையில் பேசுகிறார்கள்.