2010-05-01 15:26:57

பாஸ்கால 5 ம் ஞாயிறு - இரண்டாம் வாசகம். தி.வெ.21: 1-5


யோவான், நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று.2 அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது.3 பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்: அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார்.4 அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது: முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன என்றது.5 அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன் என்று கூறினார். மேலும், ″ இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை″ என எழுது என்றார்.








All the contents on this site are copyrighted ©.